தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர் பைஜானில் நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பும் வெளிநாட்டில் நடக்க உள்ளதால் நடிகர் அஜித்குமார் இன்று(07-03-2024) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளார். அவரது உடல் நிலையில் எந்த வித பிரச்சனையும் இல்லை என்றும், வழக்கமான பரிசோதனை செய்துகொள்ளவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரிசோதனைகள் முடிந்து ஓரிரு நாளில் அஜித் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.