திருச்சி வடக்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஏ.கனகராஜ், எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்!
திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக புரட்சித்தலைவி பேரவை இணைச் செயலாளராக ஏ.கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். திருச்சி வடக்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஏ. கனகராஜை கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் சந்தித்து சால்வை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.