Rock Fort Times
Online News

திருச்சியில் விபத்து: சப்-இன்ஸ்பெக்டர் வாகனம் மோதி தொழிலாளி பலி…

திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி ( வயது 65). கூலித்தொழிலாளி. இவர், நேற்று ( 27.06.2023 ) இரவு கருமண்டபம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில், கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த கருப்பு சாமியின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய சப்- இன்ஸ்பெக்டரை கைது செய்யக்கோரியும், சாலையை சரிசெய்யக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும், சப்- இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் கருப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்