திருச்சி மாவட்டம் கிளிக்கூடு பகுதியை சேர்ந்தவர் கனி ( வயது 50). இவர் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2022 மற்றும் 2023-ம் நிதியாண்டில் இவர் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மணிகண்டம் ஊராட்சி கணக்காளர் பணியிலிருந்து கனியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமார் ஐஏஏஸ் உத்தரவிட்டுள்ளார். இதற்கான நகல் அவர் வீட்டின் கதவில் ஓட்டப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.