வாடகை பாக்கி: திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் 12 கடைகளுக்கு ‘சீல்’..
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 30 -க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாடகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டார். அதன் பேரில் வாடகை நிலுவை உள்ள 12 கடைகளை இன்று ( 16.06.2023 ) மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் சிவசங்கர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர்கள் பிச்சைமணி, செந்தில்குமார், ராஜேந்திரன் மற்றும் வரித்தண்டளர்கள் கொண்ட குழுவினர் பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் சத்திரம் பஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.