தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி கிழக்கு மன்னார்புரம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- துவாக்குடி துணை மின் நிலையத்தில் 17- ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்., அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி பகுதி, எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல்டவுன்ஷிப்பில் சி செக்டார் மற்றும் ஏ,இ,ஆர் மற்றும் பிஎச் செக்டார், தேசிய தொழில்நுட்பக்கழகம் (என்.ஐ.டி.), துவாக்குடி மற்றும் தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
இதேபோல் திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் 17-ம் தேதி(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, டி-நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருஷ்ணசமுத்திரம், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி.,சோழமாநகர், பிரகாஷ் நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேரு நகர், போலீஸ் காலனி, பாரத் நகர் 100 அடிரோடு, குண்டூர், மலைக்கோவில், கிளியூர், பர்மா காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி, காவேரிநகர் மற்றும் சுற்றுவட்டார பகதிகளில் மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.