Rock Fort Times
Online News

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: தவெக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைப்பு…!

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளின் வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால் மதுராந்தகம்( தனி) மற்றும் தாராபுரம்( தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்
வருகிற அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் போட்டியிடுவார்கள் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.இந்தநிலையில் இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தேர்தல் கண்காணிப்பாளர்கள்:

1.அமைச்சர் என்.ஆனந்த்

2. அமைச்சர் செங்கோட்டையன்

3. அமைச்சர் நிர்மல் குமார்.

தேர்தல் பணிக்குழு

மதுராந்தகம் (தனி)

பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இணைப் பொறுப்பாளர்கள்:

அமைச்சர்
ராஜ்குமார்

அமைச்சர் தென்னரசு

அமைச்சர் வினோத்.

துணைப் பொறுப்பாளர்கள்:

எம்.எல்.ஏ சரவணமூர்த்தி

எம்.எல்.ஏ தியாகராஜன்

எம்.எல்.ஏ விஜயராஜ்

எம்.எல்.ஏ காமாட்சி

பாலாஜி (எ) மணிகண்டன்

தாராபுரம்

பொறுப்பாளர்: அமைச்சர் அருண்ராஜ்

இணைப் பொறுப்பாளர்கள்:

அமைச்சர் விஜய் பாலாஜி

அமைச்சர் விஜயலட்சுமி

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

துணைப் பொறுப்பாளர்கள்:

பாலமுருகன் எம்.எல்.ஏ.

சத்தியபாமா எம்.எல்.ஏ

ராம்குமார் எம்.எல்.ஏ

திலீப் எம்.எல்.ஏ

சத்யா எம்.எல்.ஏ.

அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்