தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50 ஆயிரம் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பணமாகவோ, பொருட்களாகவோ எடுத்துச் சென்றால் ஆவணங்கள் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் தேர்தல் நிலை கண் காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, 24 பெட்டிகளில் மொத்தம் 13 கிலோ தங்க நகைகள், 34 கிலோ வெள்ளி நகைகள் என மொத்தம் ரூ.19.63 கோடி மதிப்பிலான நகைகளை பிரபல நகைக்கடைக்கு எடுத்துச் செல்வது தெரிய வந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Comments are closed.