Rock Fort Times
Online News

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்காக உடலையும் தானமாக கொடுத்த நல்லகண்ணு…!

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் ஆர்.நல்​லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக நேற்று(25-02-2026) கால​மா​னார். இன்று மாலை முழு அரசு மரியாதைக்கு பிறகு, அவரது உடல் மருத்​துவ மாணவர்​களின் ஆராய்ச்​சிக்​காக சென்னை மருத்​து​வக் கல்​லூரிக்கு தானமாக வழங்கப்​படு​கிறது. காலமான நல்லகண்ணு உடல் மாலை 5 மணிக்கு சென்னை தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலை​யில் உள்ள இந்​திய கம்யூனிஸ்ட் கட்சி அலு​வல​க​மான பாலன் இல்​லத்​தில் அஞ்சலிக்காக வைக்​கப்​பட்​டது. பொது​மக்​கள், கட்​சி​யினர், பல்​வேறு அரசியல் கட்​சிகளை சேர்ந்​தவர்​கள், குடும்​பத்​தினர், உறவினர்​கள், நண்​பர்​கள் என ஏராள​மானோர் நல்​ல​கண்ணு உடலுக்கு அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர். இன்று பிற்​பகல் 3 மணிக்கு பிறகு, நல்​ல​கண்​ணு​வின் விருப்பப்படியே அவரது உடல் ஊர்​வல​மாக கொண்டு செல்லப்பட்டு மருத்​துவ மாணவர்​களின் ஆராய்ச்​சிக்​காக, சென்ட்​ரலில் உள்ள சென்னை மருத்​து​வக் கல்லூரிக்கு (எம்​எம்​சி) – ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு தானம் வழங்​கப்​பட​வுள்​ளது. தன் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் நல்லகண்ணு. எளிமையாகவே வாழ்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் நீத்தார். தனது உடலையும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்காக தற்போது கொடுத்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்