சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் சக வீரர்கள் ஸ்டேடியம் முழுவதும் நடந்து வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியுற்றிருந்தாலும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு வீரர்கள் சிறப்பு தருணத்தை தந்தனர். அப்போது, திடீரென கமெண்ட்ரி பாக்ஸில் கமெண்ட்ரி செய்து கொண்டிருந்த கவாஸ்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரை நோக்கி ஓடி வந்தார். நேராக ஓடிவந்தவர் தோனியிடம், எனது வெள்ளை சட்டையில் உங்களது ஆட்டோகிராப்பை போட முடியுமா? என கேட்டார். இதை பார்த்த தோனி சிரித்துகொண்டே கவாஸ்கரின் நெஞ்சு பகுதியில் தனது ஆட்டோகிராபை போட்டு, அதன்பிறகு கவாஸ்கரை இறுக்கமாக கட்டிப்பிடித்தார். உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான கவாஸ்கர், பல இளைஞர்களுக்கும் இன்னும் முன் உதாரணமாக இருக்கிறார். இவரே குழந்தைபோல் ஓடி வந்து தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.