எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவருடைய சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை…!
மறைந்த முன்னாள் முதல்வர், அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 38 -வது நினைவு தினத்தை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், மாநகராட்சி அதிமுக தலைவர், கவுன்சிலர் அம்பிகாபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், ஐடி பிரிவு செயலாளர் வெங்கட்பிரபு, சிறுபான்மை பிரிவு அப்பாஸ், கலை இலக்கியப் பிரிவு ஜான் எட்வர்டுகுமார், இளைஞர் பாசறை செயலாளர் லோகநாதன், பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் தினேஷ் பாபு, கருமண்டபம் சுரேந்தர், பேரவை மாவட்ட தலைவர் எனர்ஜி அப்துல் ரகுமான், பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, அன்பழகன், ரோஜர், வாசுதேவன், சிறுபான்மை பிரிவு தென்னூர் ஷாஜகான், இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மகளிர் அணி துணைத்தலைவி வழக்கறிஞர் புவனேஸ்வரி, மகளிர் அணி இணை செயலாளர் ஜெயஸ்ரீ, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அப்பா குட்டி, ஐடி பிரிவு கதிரவன், புத்தூர் ரமேஷ், விஷ்வா, டிபன் கடை கார்த்திகேயன், வசந்தம் செல்வமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.