திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (03.11.2025) திங்கட்கிழமை மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். அந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்று மேயர் உறுதி அளித்தார். அப்போது மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் லி. மதுபாலன், மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, நகரப் பொறியாளர் பி.சிவபாதம் மற்றும் நகர் நல அலுவலர், செயற்பொறியார்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed.