மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‘மோன்தா’ புயலானது தீவிர புயலாக வலுப் பெற்றுள்ளது. ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 230 கி.மீ., காக்கிநாடாவில் இருந்து 310 கி.மீ. தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே இன்று (அக்.28) மாலை அல்லது இரவு புயல் கரையை கடக்க உள்ளது. புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும்போது மழையின் தீவிரம் அதிகம் இருக்கும். இதனால் ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரிக்கு செல்லும் 9 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மோன்தா புயல் எதிரொலியாக ஆந்திராவில் இன்றும், நாளையும் 67 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
* சென்ட்ரல் – ஹவுரா, சென்ட்ரல்-விசாகப்பட்டினம், விழுப்புரம்-காரக்பூர்,
* திருச்சி-ஹவுரா உள்ளிட்ட 11 ரெயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
* மழை காரணமாக சென்னை சென்ட்ரல் – விசாகப்பட்டினம் சூப்பர் பாஸ்ட் ரெயில், புவனேஸ்வர் – புதுச்சேரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி – புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* பெங்களூரு – நியூ தின்சுகியா ஜங்ஷன், பெங்களூரு –ஹாதியா, பெங்களூரு – அகர்தலா, பெங்களூரு – ஹவுரா ஜங்ஷன், பெங்களூரு – ஹவுரா ஜங்ஷன், பெங்களூரு – மால்டா டவுன், வாஸ்கோடகாமா – ஷாலிமர் ரெயில்கள் 12 மணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
* பெங்களூரு – ஹாடியா எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயவாடா, வாராங்கல், சந்த் போர்ட், பிலாச்பூர், ஜர்சுகுடா ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

Comments are closed.