Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்… மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது!

திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (13.10.2025) திங்கட்கிழமை மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, மண்டலத் தலைவர் துர்காதேவி, துணை ஆணையர் க.பாலு மற்றும் நகரப் பொறியாளர், நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்