Rock Fort Times
Online News

திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை…* அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.!

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை  கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி  வருகிறது. இந்நிலையில் திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு இன்று (23.09.2025) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன், மேலாளர், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கோபி  மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.  விழா ஏற்பாடுகளை திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சங்கர் சிறப்பாக செய்திருந்தார்.திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளி 2024ல் ரூ. 2 கோடியே 2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த தீபாவளி 2025க்கு ரூ.2 கோடியே 75  லட்சத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்,  மாதாந்திர சேமிப்பு  திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் ஜவுளிகள் வழங்கப்பட்டு வருகிறது. மின் வணிக விற்பனையும் நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள்  http://www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப ஜவுளி இரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்