தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று( செப்.11) டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து பதவி பறிக்கப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன், ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாக சொல்லிவிட்டு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இந்த சூழலில் அமித்ஷா, செங்கோட்டையன் இடையே நடந்த சந்திப்பு பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன், அங்கு அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.