திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்: கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மேயர் மு.அன்பழகன் உத்தரவு…!
திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். மக்கள் முன்வைத்த மனுக்கள் பெரும்பாலும் குடிநீர் வசதி, சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, தூய்மை பணிகள் உள்ளிட்ட அன்றாட வாழ்வைச் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பானவையாக இருந்தன. கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் அன்பழகன், அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் மதுபாலன், மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் துணை ஆணையர், நகரப் பொறியாளர், நகர்நல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.