Rock Fort Times
Online News

நாட்டில் நிறைய பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள்- த.வெ.க.தொண்டர்களை மீண்டும் சீண்டிய சீமான்…!

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தெரு நாய்களை முன்பே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆர்வலராக இருந்தாலும் தமக்கு பாதிப்பு ஏற்படும் போது பயம் வந்துவிடும். அதை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். திருடன், பேய் பயத்தை விட நாய் பயம் வந்துவிடும். அப்போது நிருபர்கள் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, நான் ஒரு ஆய்வாளர் இல்லை. அது ஒரு கட்சியின் மாநாடு. தமிழக வெற்றிக் கழக மாநாடு நோக்கம் வெற்றி அடைந்தால் சரிதான். முதல் நாளே மாநாட்டிற்கு சென்றது நாட்டில் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக எம்பிக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என எச்.ராஜா கேட்டுக் கொண்டுள்ளாரே…  சமீபத்தில் கனிமொழி எம்பி கூறும்போது, நாங்கள் பாஜக கொள்கைகளில் மாறுபடுகிறோம், அவர்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார். நீங்கள் என்ன செய்தீர்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து வெளிநாட்டிற்கு பிரதிநிதியாக சென்று பேசிய போது ஏன் இந்த கொள்கை தெரியவில்லை. தமிழுக்கும், தமிழருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்துள்ளது. திராவிடம் என்பது சமஸ்கிருத சொல். மாடல் என்பது ஆங்கில சொல். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்வது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதனை வரவேற்கிறேன். தெருவுக்குத் தெரு மது கடைகளை திறந்து வைத்துவிட்டு போதையை ஒழிப்பேன் என கூறுவது எப்படி. அவர்கள் பாஷையில் குடிசை ஒழிப்பு என கூறி குடிசையை கொளுத்தி விட்டு குடிசை ஒழிப்பு என்பார்கள். அதேபோல மது ஒழிப்பு எனக் கூறி மதுவை குடித்து தான் ஒழிக்க முடியும் என்றார். தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் டீ விற்பவர்கள் என்றும், அணில் குஞ்சுகள் என்றும் ஏற்கனவே சீமான் விமர்சித்து இருந்தார். தற்போது வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்