திருச்சி, பீமநகரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்… * மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார்!
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் திருச்சி மாநகராட்சி மண்டலம்-4 51 மற்றும் 52 ஆகிய வார்டுகளுக்கு பீமநகரில் இன்று( ஜூலை 25) நடைபெற்றது. முகாமை
மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த முகாமில் ஆணையர் மதுபாலன், மண்டலக்குழு தலைவர் துர்கா தேவி, உறுப்பினர் கலைச்செல்வி, உதவி ஆணையர் சண்முகம் மற்றும் மேற்கு வட்டாட்சியர், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.