Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.44.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள்… * அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், மாநகராட்சி பொது நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மலைக்கோட்டை வார்டு 13, தாயுமானவர் தெருவில் மாநகராட்சி பொதுநிதி ரூ.19.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடம் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டுக் கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்து குத்துவிளக் கேற்றினார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்வில், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மண்டலக் குழுத்தலைவர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்