திருச்சி, திருவெறும்பூர் நேதாஜி நகர் நவசக்தி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-* ஜூலை 2-ம் தேதி நடக்கிறது!
திருச்சி, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலுக்கு அருகாமையில் நேதாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசக்தி மகா மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 2-ம் தேதி( புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் நடைபெறுகிறது. முன்னதாக 30-06-2025 திங்கட்கிழமை அதிகாலை 5-30 மணி முதல் 7-30 மணி வரை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புன்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை போன்றவையும், காலை 9 மணிக்கு மேல் காவிரியில் இருந்து திருமஞ்சனம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மாலை 5-30 மணி முதல் இரவு 9 மணி வரை தேவார இசை, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, வேத பாராயணம், தீபாராதனை ஆகியவை நடக்கின்றன. 01-07-2025 (செவ்வாய்க்கிழமை) காலை 8-30 மணி முதல் பகல் 12 மணி வரை மங்கள இசை, தேவார இசை, பூர்வாங்க பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை, யந்திர ஸ்தாபனம் ஆகியவையும் மாலை 5-30 மணி முதல் இரவு 9 மணி வரை தேவார இசை, பூர்வாங்க பூஜைகள், மூன்றாம் கால யாக பூஜை, நவ கன்னிகா பூஜை, சுமங்கலி, சுவாசினி பூஜை போன்றவையும் நடக்கின்றன. 02-07-2025 புதன்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை மங்கள இசை, தேவார இசை, பூர்வாங்க பூஜைகள், கோ பூஜை, பிம்ப சுத்தி, நான்காம் கால யாக பூஜை, விசேஷ திரவியம் போன்றவையும், காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நவசக்தி மகா விநாயகர், நவசக்தி மகா மாரியம்மன், நவசக்தி மகா முருகன், பனையடி கருப்பு, காத்தவராயன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, பிராம்னி, நாகர், நவக்கிரகம், உற்சவர் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், பொதுமக்கள், டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் நேதாஜி நகர் மகளிர் அணியினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Comments are closed.