வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்கிற தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய லோகோ அறிமுக விழா திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஜாவித் வரவேற்றார். தமிழக தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையர் ஜே.இன்னசென்ட் திவ்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய லோகோவை அறிமுகம் செய்தார். இதுகுறித்து வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஜாவித் பேசும்போது.,
எங்கள் நிறுவனம் ட்ரோன்கள், ரோபோக்கள், பிளாக் செயின்கள், கழிவு மேலாண்மை மற்றும் விவசாய தொழில்நுட்பங்களில் புதுமையான தீர்வுகளை உருவாக்கும் நோக்கத்துடன் திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கான புதிய லோகோவை திறன்மிக்க இளம் ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான இன்னசென்ட் திவ்யா வெளியிட்டது எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கின்ற நிகழ்வு. தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, சமூக,பொருளாதார, விவசாய கட்டமைப்புகளை மேம்படுத்தி உலக அளவில் எமது நிறுவனம் பல்வேறு உச்சங்களை தொட இது பெரிதும் உதவும் என்றார். இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக டீன் செந்தில்குமார், தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.