திருச்சி, தென்னூர் ரஹ்மானியாபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று அவ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற இன்று பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். இதுபற்றிஅறிந்த அப்பகுதி வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சாலை மறியலை கைவிட்டு களைந்து செல்லும்படி கூறினார். இதனால் போலீசாருடன் அப்பகுதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இதையடுத்து மாநகராட்சி நகர பொறியாளர் சிவபாதம் தலைமையிலான அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டது. இச்சம்பவத்தால் தென்னூர் ஹை – ரோடு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed.