நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழகத்தில் இயங்கும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடங்களை பதிவு செய்ய வருபவர்கள் வசதிக்காக கூடுதல் டோக்கன்கள் வழங்க தமிழக பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.,
சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான நாளை ( ஜூன் -27) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆகவே பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் கூடுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. எனவே நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Comments are closed.