திருச்சி,முத்தரசநல்லூர் முத்தமிழ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 57). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு ட்ராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வங்கியில் பணம் டெபாசிட் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் உறையூர் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது பைக் அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக உரசியதாக தெரிகிறது. ஆனால், செல்வம் பைக்கை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவரான தினேஷ்(33 ) அவரை துரத்திச் சென்று கோணக்கரை பகுதியில் மடக்கினார். பின்னர் ஏற்பட்ட தகராறில் தினேஷ் செல்வத்தை கல்லால் தாக்கி விட்டு தப்பிச் சென்றார். இதில், காயமடைந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர் தினேஷை உறையூர் போலீசார் கைது செய்தனர்.
Comments are closed.