திருச்சி, அரியமங்கலம் காமராஜ் நகர் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 70 ).இவர் தனது பைக்கில் திருச்சி – தஞ்சாவூர் சாலையில் சென்றார். அப்போது அங்கு நிலை தடுமாறி கீழே விழுந்தார் .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகனான ஷேக் முகமது கொடுத்த 3 புகாரின் அடிப்படையில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.