Rock Fort Times
Online News

திருச்சி, உறையூர் பேட்டரி சர்வீஸ் சென்டரில் திருட்டு- வாலிபர் கைது !

திருச்சி, உறையூர் ராஜரத்தினம் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 47). இவர் அந்த பகுதியில் பேட்டரி சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவர் மதிய உணவு சாப்பிட அருகிலுள்ள ஓட்டலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஒரு பேட்டரி திருடு போனது தெரியவந்தது இது குறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில்,உறையூர் ஆப்பக்கார தெருவை சேர்ந்த கவின் ஜெயக்குமார் என்பவர் பேட்டரியை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்