Rock Fort Times
Online News

திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!

திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் வடக்கு இருங்கலூரை சேர்ந்தவர் ரோக்ராஜ். இவரது அண்ணன் ஆரோக்கியசாமி. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 2025-ம் ஆண்டு ரோக்ராஜ் அவரது அண்ணன் ஆரோக்கியசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு விடுதலையானார். இந்நிலையில் ரோக்ராஜ், குடும்பத்துக்கும், ஆரோக்கியசாமி மகன் ஜேசுராஜ் குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வயலுக்குச் செல்லும் பொதுப்பாதை சம்பந்தமாக மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்கனவே தனது தந்தையை கொலை செய்த ஆத்திரத்தில் இருந்த ஆரோக்கிய சாமியின் மகன் ஜேசுராஜ், அவரது மகன் பிரின்ஸ் பர்னாண்டஸ், ஜேசுராஜ் மனைவி ஞான சௌந்தரி ஆகிய 3 பேரும் சேர்ந்து ரோக்ராஜ் மற்றும் அவரது மகன் ஜான் டேவிட் ஆகிய இரண்டு பேரையும் 2020-ம் ஆண்டு சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேசுராஜ், பிரின்ஸ், ஞானசௌந்தரி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி கோபிநாத் இன்று(21-06-2025) தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ஜேசுராஜ் மற்றும் பிரின்ஸ் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ஞான சௌந்தரி விடுதலை செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை பெற்ற ஜேசுராஜ் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் வாதாடினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்