திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு…!
திருச்சி நகரியம் கோட்டம், துணைமின் நிலையத்தில் நாளை( 21.06.2025) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் இரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னி பிளாசா பகுதி, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியார்சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜா பஜார், பாண்டமங்கலம், வயலூர் ரோடு, கனராபேங்க் காலனி, குமரன் நகர், சிண்டிகேட் பேங்க், பேங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், இராமலிங்கநகர், கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், எம்.எம்.நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், சோழங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு, நாச்சியார் கோயில், பொள்னகர், கருமண்டபம், செல்வநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இதேபோல, ஈபி ரோடு துணை மின்நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ஈபி ரோடு, மணி மண்டப சாலை, காந்தி மார்க்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ் ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏபி நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், துணை மின் நிலையம் பரமசிவபுரம் மின் பாதையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக பரமசிவபுரம், பரமசிவபுரம் விஸ்தரிப்பு, தெற்கு காமராஜ் நகர், உமர் நகர், பாரதி நகர், வஉசி நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.