கரூரில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் சுற்றி வளைத்த போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காவல் ஆய்வாளர் மணிவண்ணன் சுட்டதில் ரவுடி பென்சில் தமிழரசனுக்கு காலில் குண்டு பாய்ந்தது. இதில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி பென்சில் தமிழரசன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் இந்த சம்பவம் கரூரில் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.