Rock Fort Times
Online News

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்தது- * மலர் தூவி விவசாயிகள் வரவேற்பு…!

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
அந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையை கடந்து இன்று(14-06-2025) திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. முக்கொம்புக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவியும், நெல் மணிகள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக முக்கொம்பு சுற்றுலா தல நுழைவு வாயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். அதனைத்தொடர்ந்து முக்கொம்பு மேலணையில் உள்ள காவிரி தாய் சிலைக்கும், கரிகாலன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காவிரிக்கு படையலிட்டு பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், த.மா.கா. விவசாய அணி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்