திருச்சி, துவாக்குடி மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி மெர்ஜினி லூசியா. இவர் துவாக்குடி நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியரின் மகன் மனோஜ் குமார் (26). இவர் ஒரு கம்பெனி மூலமாக கடந்த ஆண்டு துபாய்க்கு வேலைக்குச் சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி வந்தார். வெளிநாட்டில் இருந்து வந்ததிலிருந்து அவர் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார். வழக்கம்போல மெர்ஜினி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது மனோஜ் குமார் வீட்டில் தூக்கு போட்டு பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அலறி துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனோஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனோஜ்குமாரின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.