பாமக சமூக நீதிப் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்- * டாக்டர் ராமதாஸ் அதிரடி…!
பாமகவில் டாக்டர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் முற்றி வருகிறது. அவர்களை சமாதானப்படுத்த கட்சி நிர்வாகிகள் முயன்று வருகின்றனர். இதன் பயனாக கடந்த 05-06-2025 அன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸும், அன்புமணியும் சந்தித்து பேசினர். ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள், என்ன முடிவு எடுத்தார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் ஒரே காரில் சென்று ராமதாசை சந்தித்து பேசினர். இது குறித்தும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பாமகவில் முக்கிய நிர்வாகியாக கருதப்படும் வழக்கறிஞர் பாலுவை கட்சியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்கியுள்ளார். பாமகவில் சமூக நீதிப் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து பாலுவை நீக்கியுள்ள ராமதாஸ், பாலுவிற்கு பதிலாக வி.எஸ்.கோபு என்ற வழக்கறிஞரை சமூகநீதிப் பேரவையின் புதிய தலைவராக நியமனம் செய்துள்ளார். ஏற்கனவே அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வரும் நிலையில் வழக்கறிஞர் பாபு நீக்கமும் பாமக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.