Rock Fort Times
Online News

மாடு வளர்க்க விருப்பமா? திருச்சியில் ஜூலை 8ம்தேதி வழிகாட்டுப் பயிற்சி வழங்குகிறது அரசு !

திருச்சி, ஏர்ப்போர்ட் அருகேயுள்ள கொட்டப்பட்டில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் ஜூலை 8-ம் தேதி கறவைமாடு வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது.,
தரமான கறவை மாடுகளை தேர்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, செயற்கை முறை கருவூட்டல், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்த் தடுப்பு முறைகள், தீவனப்பயிர் சாகுபடி, தீவன மரங்கள் வளர்ப்பு, ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து இந்த பயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படும். வல்லுநர்களுடன் கலந்துரையாடல், பயிற்சி கையேடு, பயிற்சி சான்றிதழ், மதிய உணவு உள்ளிட்டவையும் இந்த பயிற்சி வகுப்பில் இடம்பெற்றுள்ளது. விருப்பமுள்ளோர் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது, பயிற்சி மைய வளாகத்துக்கு நேரில் வந்து ரூ.500 கட்டணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து பங்கேற்கலாம். 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என பேராசிரியரும், மையத் தலைவருமான கே. ஷிபி தாமஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்