திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் செய்தி எதிரொலி: அரியமங்கலம் பகுதியில் ஆபத்தான மின்கம்பம் சீரமைப்பு… * மின்வாரிய அதிகாரிகளுக்கு பாராட்டு!
திருச்சி மாவட்டம், கிழக்கு தாலுகா, அரியமங்கலம், அம்மாகுளம் முல்லைநகர் செல்லும் பாதையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் நின்றது. அந்த மின்கம்பம் கீழே சாய்ந்து விடாமல் இருப்பதற்காக மூங்கிலால் முட்டு கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால், அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டனர். இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே சரிந்து விழுந்து விபரீத சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மின்வாரிய அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதுதொடர்பான செய்தி திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் சோசியல் மீடியாவில் படத்துடன் வெளியிடப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக ஆபத்தான நிலையில் சாய்ந்து நின்ற மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Comments are closed.