திருச்சி, தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் தேரோட்டம்…- ஓம்சக்தி…பராசக்தி… கோஷங்களுடன் வடம் பிடித்த பக்தர்கள்!
திருச்சி, தென்னூர் உக்கிர மாகாளியம்மன் சித்திரை தேர் திருவிழா மே 4-ம் தேதி அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ச்சியாக தினம்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல ஒவ்வொரு நாள் இரவும் கேடயம், அன்னம், பூத வாகனம், ரிஷபம் யானை போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேர் திருவிழா இன்று(12-05-2025) மிதுன லக்னத்தில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி…பராசக்தி… கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக காலை 6 மணிக்கு அபிஷேகம் மற்றும் மூலஸ்தானத்திலிருந்து தாயார் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. நாளை (மே 13) செவ்வாய்க்கிழமை விடையாற்றி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. தேரோட்டத்தை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Comments are closed.