71 கோவில்களில் சிறப்பு பூஜை – ரத்ததான முகாம் – அன்னதானம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் சிறப்பு ஏற்பாடு !
அதிமுக பொது செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மே12ம் தேதியான நாளை 71 வது பிறந்தநாள். இதை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில் உட்பட திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 71 கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், அம்மா பேரவை செயலாளர் ஆவின் கார்த்திகேயன், 14 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சி. அரவிந்தன், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி. ரத்தினவேல், அதிமுக நிர்வாகிகள் ஜோதிவாணன், பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல திருச்சி வயர்லெஸ் ரோட்டில் உள்ள லூப்ரா பார்வையற்றோர் காப்பகத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் ஆர்.ஜோதி வானன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஏற்பாட்டில் பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் சிறப்பு ரத்ததான முகாம் மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் ஏற்பாட்டில் மரக்கடையில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட துணை செயலாளர் வனிதா,பத்மநாதன்,முன்னாள் மாவட்ட செயலாளர் கே. சி பரமசிவம், மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் ரஜினிகாந்த், ஜான் எட்வர்டு குமார், மருத்துவரணி செயலாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர் முஸ்தபா, அன்பழகன், வாசுதேவன், நாகநாதர்பாண்டி , டி.எஸ்.எஸ்.கலீல் ரகுமான், கலைவாணன், ஏர்போர்ட் விஜி, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், கௌசல்யா முன்னாள் அரசு வழக்கறிஞர் மலர்வழி, ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் டி ஆர் சதீஷ்குமார், இன்ஜினியர் ரமேஷ், சொக்கலிங்கம், ரமணி லால், எனர்ஜி அப்துல் ரகுமான், கலை பிரிவு பொருளாளர் சாதிக், நிர்வாகிகள் பிரித்திவிராஜ், ஆசைத்தம்பி, கே.பி அன்பு ரோஸ், கே.பி.ஏ ஆனந்தராஜ், நத்தர்ஷா,, அரவானூர் பன்னீர்செல்வம்,, சுரேஷ் கண்ணன் முத்தையா, சுப்ரா வினோத், பிச்சைமணி, கார்த்தி, பேக்கரி முருகன், குருமூர்த்தி,பாலசுப்பிரமணியன், ராஜாளி சேகர்,டைமன்ட் தாமோதரன், ஐ. டி நாகராஜ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.