சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத்(56) மாரடைப்பு காரணமாக நேற்றிரவு( மே 6) காலமானார். சத்திய நாராயண பிரசாத், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் மார்ச் 2023-ல் நிரந்தரமாக நியமிக்கப்பட்டார். தற்போது உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் 63 நீதிபதிகளில் இவரும் ஒருவர். சத்திய நாராயண பிரசாத் நீதிபதி ஆவதற்கு முன்னதாக, 1997-ம் ஆண்டிலிருந்து 24 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். தஞ்சாவூரில் பிறந்தவரான சத்திய நாராயண பிரசாத், உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, பிஎஸ்என்எல், சென்னை துறைமுக அறக்கட்டளை, இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
Comments are closed.