Rock Fort Times
Online News

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தின் போது தேரில் இருந்து தலைக்குப்புற விழுந்தவரால் பரபரப்பு…!( வீடியோ இணைப்பு)

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று(07-05-2025) காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு பெரிய கோவிலில் இருந்து கமலாம்பாளுடன் சந்திரசேகர் உற்சவ மூர்த்திகளை கோவில் பணியாளர்கள் தூக்கி வந்து தேரில் வைத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கோவில் பணியாளர் ஒருவர் தேரில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தார். இதில் அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கோவில் பணியாளர் தேரில் இருந்து சுமார் 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்