Rock Fort Times
Online News

திருவாரூரில் அரசு பஸ்- வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பலி…!

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், நாகப்பட்டினத்தில் இருந்து, ஏர்வாடி சென்ற அரசு பஸ்சும், வேளாங்கண்ணி சென்ற ஆம்னி வேனும் இன்று (மே 04) காலை 7 மணி அளவில்,நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்