2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய அயராது பாடுபட வேண்டும்…- திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், 2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர் மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் மருங்காபுரி வடக்கு செயலாளர், முன்னாள் எம்எல்ஏ ஆர்.சந்திரசேகர், மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சுபத்ராதேவி, பொன்னுச்சாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது இஸ்மாயில், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எஸ்.கே.டி.கார்த்திக் ராவணன், டி.என்.சிவகுமார், சேது, சூப்பர் டிஎன்டி நடேசன், அசோகன், கண்ணூத்து பொன்னுச்சாமி, பி.வி.கே.பழனிசாமி, அன்பரசன், நகர செயலாளர்கள் எஸ்.பி.பாண்டியன்,பொன்னி சேகர், மாவட்ட பேரவை செயலாளர் சூரியூர் ராஜ மணிகண்டன், பேரூர் செயலர்கள் ஜேக்கப் அருள்ராஜ், ஜெயசீலன், முத்துக்குமார், திருமலை சாமிநாதன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்தி, விஜயா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், தொழிற்சங்கம் கார்த்திக், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்திட நமது மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் அல்லும் பகலும் அயராது உழைத்து பாடுபடுவது. பொய் வாக்குறுதி கொடுத்து, கடன் சுமையை ஏற்றிய திமுக அரசை வன்மையாக கண்டிப்பது. மே 12-ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed.