Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.16.52 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி சிக்கியது…!

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி தனது லக்கேஜில் இந்திய மதிப்பில் ரூ.16 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தப் பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்