Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதியில் பயிற்சி முடித்த 10 பேர் சப்- இன்ஸ்பெக்டர்களாக நியமனம்…!

திருச்சி மாநகர பகுதியில் பயிற்சி முடித்த 10 பேர் சப்- இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் தில்லைநகர் காவல் நிலையத்தில் பயிற்சி முடித்த ரவிச்சந்திரன், அதே காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கண்டோன்மெண்ட் சட்டம் – ஒழுங்கு பிரிவில் பயிற்சி முடித்த ஜவகர், கே.கே.நகர் குற்ற பிரிவுக்கும், ஸ்ரீரங்கம் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் பயிற்சி முடித்த பாஸ்கரமூர்த்தி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவுக்கு எஸ்.ஐ.யாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அரியமங்கலம் சட்டம் –  ஒழுங்கு காவல் நிலையத்தில் பயிற்சி முடித்த சந்துரு காந்தி மார்க்கெட் சட்டம் – ஒழுங்கு காவல் நிலைய எஸ்.ஐ.யாகவும் கே.கே.நகர் சட்டம் – ஒழுங்கு காவல் நிலையத்தில் பயிற்சி முடித்த சந்தானகிருஷ்ணன் ஏர்போர்ட் காவல் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.  எடமலைப்பட்டிபுதூர் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் பயிற்சி முடித்த வாசு கோட்டை குற்றப்பிரிவுக்கு எஸ்.ஐ.யாகவும், செசன்ஸ் கோர்ட் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் பயிற்சி முடித்த விட்டல்சிங் அதே காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாகவும், உறையூர் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் பயிற்சி முடித்த குமாரவேல் காந்தி மார்க்கெட் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். காந்தி மார்க்கெட் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் பயிற்சி முடித்த வெங்கட்ராமன் கண்டோன்மெண்ட் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் எஸ்.ஐ. யாகவும், அரசு மருத்துவமனை சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் பயிற்சி முடித்த தாயுமானவன் அரியமங்கலம் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பிறப்பித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்