Rock Fort Times
Online News

திருச்சியில் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்றியபோது வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர் சங்கத்தினர் கைது…! ( வீடியோ இணைப்பு)

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று(21-04-2025) திருச்சி, டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள திமுக, மதிமுக உள்ளிட்ட கல்வெட்டுகளையும், கொடிக்கம்பங்களையும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவற்றினர். மேலும், நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் எட்டாவது மாவட்ட பேரவை நினைவு கல்வெட்டு மற்றும் கொடி கம்பத்தை அகற்ற வந்தனர். ஆனால் சாலை பணியாளர் சங்கத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்த போதும் அவர்கள் கொடிக்கம்பத்தை அகற்ற ஒத்துழைப்பு தராததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் கல்வெட்டு மற்றும் கொடி கம்பம் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்