தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் இருந்து வருகிறது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை,துபாய் உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் திருச்சி ஏர்போர்ட்டை மையமிட்டு சமீப காலமாக தங்க கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் இருந்து திருச்சி வழியாக அதிகளவு தங்க கடத்தல் நடைபெற்று வருகிறது.கடத்தல் தொடர்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவ்வப்போது வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வதும், கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை ( மார்ச் – 21) சார்ஜாவில் இருந்து திருச்சி வந்தடைந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.