அமைச்சர் கே.என்.நேருவுடன் ம.ஜ.க.நிர்வாகிகள் சந்திப்பு: திருச்சி அண்ணா நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க கோரிக்கை…!
மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி அறிவுறுத்தலின் பேரில், திருச்சியில் அமைச்சர் கே.என். நேருவை, ம.ஜ.க.திருச்சி மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ம.ஜ.க. இளைஞர் அணியின் மாநிலச் செயலாளர் திருச்சி ஷெரீப் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகரில் மனிதநேய ஜனநாயக கட்சி வளர்ச்சி அடைந்திருப்பதற்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு, எப்போது வேண்டுமென்றாலும் தன்னை சந்திக்கலாம் என்று தெரிவித்தார். அப்போது அவரிடம் மாநகராட்சி 28-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை நிர்வாகிகள் வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக விளையாட்டு மைதானத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில், கட்சியின் அவை தலைவர் மிர்பஹா ஷேக் தாவூத், மாவட்டத் துணைச் செயலாளர் தர்வேஸ், சேக் அப்துல்லா, சுரேஷ் காந்தி உள்ளிட்ட மாவட்ட, அணி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.