ராமேஸ்வரம் தனியார் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா ! செல்போன் முழுதும் அந்தரங்க வீடியோக்கள் – போலீஸ் விசாரணையில் ” திடுக் ” தகவல் !
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயிலுக்கு,தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். புனித தலமாக கருதப்படும் இத்திருத்தலத்தின் அருகேயுள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடும் பக்தர்கள், கடற்கரை அருகே உள்ள தனியார் உடைமாற்றும் அறைகளில் உடைகளை மாற்றிவிட்டு கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினர் கடலில் நீராடி விட்டு அதன் அருகில் இருந்த உடைமாற்றும் அறைக்கு சென்றனர். அப்போது உடைமாற்றும் அறைக்கு சென்ற இளம் பெண் அங்கு ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ்களை உற்று நோக்கிய போது சந்தேகம் அடைந்தார். அதனை சோதனை செய்த போது ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அங்கு சோதனை செய்த காவலர்கள் மூன்று அறைகளிலும் இருந்த ரகசிய கேமராக்களை கைப்பற்றினர். டீக்கடை உரிமையாளரான ராமேஸ்வரம் தம்பியான் கோட்டையை சேர்ந்த உரிமையாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் டீ மாஸ்டர் மீரான் மைதீன் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தினர் இதுகுறித்து கூறும் போது., ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரை அருகே செயல்பட்டு வந்த தனியார் உடை மாற்றும் அறையில் அதன் உரிமையாளரான ராஜேஷ் கண்ணா ஆன்லைனில் ரகசிய கேமராக்களை மறைத்து வைத்துள்ளார். இதன் மூலம் கடந்த பல மாதங்களாக இந்த அறையில் உடைமாற்றும் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை படம்பிடித்து வயர்லெஸ் கனெக்சன் மூலம் செல்போனில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துள்ளார். அந்த செல்போனை நாங்கள் கைப்பற்றி தற்போது விசாரித்து வருகிறோம்.கூடுதலாக ஒரு மெமரி கார்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.