Rock Fort Times
Online News

குளிக்கச் சென்றபோது திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களின் கதி என்ன? – தேடும் பணி தீவிரம்….! ( வீடியோ இணைப்பு )

திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 10 பேர் அரையாண்டு தேர்வை முடித்துவிட்டு குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை வழியாக திருச்சி காவிரி ஆறு அம்மா மண்டபம் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஜாகிர் உசேன், விக்னேஷ், சிம்பு ஆகிய 3 மாணவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனே, சக மாணவர்கள் அபய குரல் எழுப்பினர். இதுகுறித்த தகவலின்பேரில் திருச்சி மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஸ்கூபா டைவிங் உதவியுடன் நீரில் மூழ்கிய மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதால் ஆற்றங்கரையில் கூடி நின்ற பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

***

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்