Rock Fort Times
Online News

பொறுத்து, பொறுத்து பார்த்த மக்கள் பொங்கி எழுந்தனர்- சாலையை சீரமைக்க கோரி திருச்சி கே.சாத்தனூர்- உடையான்பட்டி சாலையில் மறியல், 20 பேர் கைது…!

திருச்சி, கே.சாத்தனூர் மற்றும் உடை யான்பட்டி பிரதான சாலை , வார்டு எண் 63 பகுதியில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலத்தடி வடிகால் திட்டம் (யு.ஜி.டி) காரணமாக சாலை பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது. சாலையில் பெரிய குழிகள் மற்றும் தற்போது பெய்த மழையால் சேறும், சகதியமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவசர உதவிகளுக்கு ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை. பல மாதங்களாக
பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், பொறுத்து பொறுத்து பார்த்த கவிபாரதி நகர் பகுதி பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரி இன்று(21-12-2024) திடீர் சாலை
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்