Rock Fort Times
Online News

தொடர் மழையால் அழுகிய நெற்பயிர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- நிவாரணம் வழங்க கோரிக்கை…!

கடந்த சில நாட்களாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகி வீணாகின. இந்நிலையில் மழை நீரால் அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள், திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு தமிழக அரசு 40 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்